செல்லமடி நீ எனக்கு

பிறந்தது பெண்
அறிந்ததும் ஏமாந்தேன்
வளர்கையில் வாகை கொண்டேன்
அறிவைக் கண்டு ஆனந்த பட்டேன்
வேடிக்கையை விரும்பினேன்
புன்னகையில் முத்தைக் கண்டேன்
பூவிதழில் புன்னகைக் கண்டேன்
கண்ணசைவில் களிப்படைந்தேன்
தளிர் நடையில் தன்மை கண் டேன்
மழலையில் மனதை இழந்தேன்
மழலையவள் யாருமல்ல
பெண் என்று பேதலித்த
பாட்டனின் பேத்தி அவள் !!!

Comments

GAYATHRI said…
atlast shruthi opened ur eyes perippa!!:)nice one!!the last line was a gr8 punch!
IvanHoe said…
miga arumayana kavidhai